January 3, 2019
Kural -201 – evil deeds
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை யென்னுஞ் செறுக்கு.
மு.வ உரை :
தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார் தீவினை இல்லாத மேலோர் மட்டுமே அஞ்சுவர்.
கலைஞர் உரை :
தீயவர்கள் தீவினை செய்ய அஞ்சமாட்டார்கள்; தீவினையால் மகிழ்ச்சி ஏற்படுவதாயினும் அதனைச் செய்திடச் சான்றோர் அஞ்சி நடுங்குவார்கள்.
சாலமன் பாப்பையா உரை :
தீமை என்னும் மயக்கத்தைச் செய்ய, முன்னைத் தீவினை உடையவர் பயப்படமாட்டார்; பெரியவர்களோ பயப்படுவர்.
English Translation:
Kural : 201
Theevinaiyaar Anjaar Vizhumiyaar Anjuvar
Theevinai Ennum Serukku
Explanation :
Those who have experience of evil deeds will not fear but the excellent will fear the pride of sin.