February 28, 2019
Kural – 256
தினற்பொருட்டால் கொல்லா துலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.
மு.வ உரை :
புலால் தின்னும் பொருட்டு உலகத்தார் உயிர்களைக் கொல்லா திருப்பாரானால் விலையின் பொருட்டு ஊன் விற்பவர் இல்லாமல் போவார்.
கலைஞர் உரை :
புலால் உண்பதற்காக உலகினர் உயிர்களைக் கொல்லாதிருப்பின், புலால் விற்பனை செய்யும் தொழிலை எவரும் மேற்கொள்ள மாட்டார்.
சாலமன் பாப்பையா உரை :
தின்பதற்காகவே கொலை செய்பவர் இல்லை என்றால், இறைச்சியை விலைக்குத் தருபவரும் உலகில் எங்கும் இருக்கமாட்டார்.
English Translation:
Kural : 256
Thinarporuttaal Kollaadhu Ulakenin Yaarum
Vilaipporuttaal Oondraruvaa Ril
Explanation :
If the world does not destroy life for the purpose of eating then no one would sell flesh for the sake of money.