August 2, 2019
Kural : 393
கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.
மு.வ உரை :
கண்ணுடையவர் என்றுக் கூறப்படுபவர் கற்றவரே கல்லாதவர் முகத்தில் இரண்டுப் புண் உடையவர் ஆவார்.
கலைஞர் உரை :
கண்ணில்லாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே கருதப்படுவார். கல்லாதவருக்குக் கண் இருப்பினும் அது புண் என்றே கருதப்படும்.
சாலமன் பாப்பையா உரை :
கற்றவரே கண் உடையவர்; கல்லாதவரோ முகத்தில் இரண்டு புண்ணையே உடையவர்.
English Translation:
Kural : 393
Kannutaiyar Enpavar Katror Mukaththirantu
Punnutaiyar Kallaa Thavar
Explanation :
The learned are said to have eyes but the unlearned have (merely) two sores in their face.