August 2, 2019
Kural : 399
தாமின் புறுவ துலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.
மு.வ உரை :
தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக் கண்டு கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் (அக் கல்வியையே) விரும்புவர்.
கலைஞர் உரை :
தமக்கு இன்பம் தருகின்ற கல்வியறிவு உலகத்தாருக்கும் இன்பம் தருவதைக் கண்டு, அறிஞர்கள் மேலும் மேலும் பலவற்றைக் கற்றிட விரும்புவார்கள்.
சாலமன் பாப்பையா உரை :
தம் மனத்தை மகிழ்விக்கும் கல்வியினால் உலகம் மகிழ்வதைக் கண்டு கற்று அறிந்தவர்கள் மேலும் கற்கவே விரும்புவார்கள்.
English Translation:
Kural : 399
Thaamin Puruvadhu Ulakin Purak Kantu
Kaamuruvar Katrarin Thaar
Explanation :
The learned will long (for more learning) when they see that while it gives pleasure to themselves the world also derives pleasure from it.