August 2, 2019
Kural : 404
கல்லாதான் ஒட்பங் கழியநன் றாயினுங்
கொள்ளார் அறிவுடை யார்.
மு.வ உரை :
கல்லாதவனுடைய அறிவுடைய ஒருக்கால் மிக நன்றாக இருந்தாலும் அறிவுடையோர் அதனை அறிவின் பகுதியாக ஏற்றுக்கொள்ள மாட்டார்.
கலைஞர் உரை :
கல்வி கற்காதவனுக்கு இயற்கையாகவே அறிவு இருந்தாலும்கூட, அவனைக் கல்வியில் சிறந்தோன் என்று அறிவுடையோர் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.
சாலமன் பாப்பையா உரை :
படித்தவர் முன் பேசினால் படிக்காதவரின் பெருமை குறைந்து போகும்.
English Translation:
Kural : 404
Kallaadhaan Otpam Kazhiyanan Raayinum
Kollaar Arivutai Yaar
Explanation :
Although the natural knowledge of an unlearned man may be very good the wise will not accept for true knowledge.