August 5, 2019
Kural : 409
மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்
கற்றா ரனைத்திலர் பாடு.
மு.வ உரை :
கல்லாதவர் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்பினும் தாழ்ந்த குடியில் பிறந்திருந்தும் கல்விக் கற்றவரைப் போன்ற பெருமை இல்லாதவரே.
கலைஞர் உரை :
கற்றவர் என்ற பெருமை, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாட்டைப் போக்கிவிடும்.
சாலமன் பாப்பையா உரை :
படிக்காதவர் மேல்சாதியில் பிறந்திருந்தாலும், கீழ்சாதியில் பிறந்திருந்தும் படித்தவர் அளவிற்குப் பெருமை இல்லாதவரே.
English Translation:
Kural : 409
Merpirandhaa Raayinum Kallaadhaar Keezhppirandhum
Katraar Anaiththilar Paatu
Explanation :
The unlearned though born in a high caste are not equal in dignity to the learned; though they may have been born in a low caste.