August 5, 2019
Kural : 412
செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.
மு.வ உரை :
செவிக்கு கேள்வியாகிய உணவு இல்லாத போது (அதற்க்கு துணையாக உடலை ஒப்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும்.
கலைஞர் உரை :
செவி வழியாக இன்பம் தரும் உணவு இல்லாதபோதே சிறிதளவு உணவு வயிற்றுக்குத் தரும் நிலை ஏற்படும்.
சாலமன் பாப்பையா உரை :
செவிக்கு உணவாகிய கேள்வி கிடைக்காதபோது, வயிற்றுக்கும் சிறிது உணவு இடப்படும்.
English Translation:
Kural : 412
Sevikkuna Villaadha Pozhdhu Siridhu
Vayitrukkum Eeyap Patum
Explanation :
When there is no food for the ear give a little also to the stomach.