August 11, 2019
Kural : 418
கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.
மு.வ உரை :
கேள்வியறிவால் துளைக்கப் படாத செவிகள் ( இயற்கையான துளைகள் கொண்டு ஓசையைக்) கேட்டறிந்தாலும் கேளாத செவிட்டுத் தன்மை உடையனவே.
கலைஞர் உரை :
இயற்கையாகவே கேட்கக்கூடிய காதுகளாக இருந்தாலும் அவை நல்லோர் உரைகளைக் கேட்க மறுத்தால் செவிட்டுக் காதுகள் என்றே கூறப்படும்.
சாலமன் பாப்பையா உரை :
கேள்வி ஞானத்தால் துளைக்கப்படாத செவிகள் ஓசைகளைக் கேட்டாலும் அவை செவிட்டுத் தன்மையவே.
English Translation:
Kural : 418
Ketpinung Kelaath Thakaiyave Kelviyaal
Thotkap Pataadha Sevi
Explanation :
The ear which has not been bored by instruction although it hears is deaf.