August 15, 2019
Kural : 420
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினு மென்.
மு.வ உரை :
செவியால் கேள்விச் சுவை உணராமல் வாயின் சுவையுணர்வு மட்டும் உடைய மக்கள் இறந்தாலும் என்ன உயிரோடு வாழ்ந்தாலும் என்ன.
கலைஞர் உரை :
செவிச்சுவை உணராமல் வாயின் சுவைக்காக மட்டுமே வாழும் மக்கள் உயிரோடு இருப்பதும் ஒன்றுதான் இல்லாமற் போவதும் ஒன்றுதான்.
சாலமன் பாப்பையா உரை :
செவியால் நுகரப்படும் சுவைகளை உணராமல், வாயால் அறியப்படும் சுவைகளை மட்டுமே அறியும் மனிதர் இருந்தால் என்ன? இறந்தால்தான் என்ன?.
English Translation:
Kural : 420
Seviyir Suvaiyunaraa Vaayunarvin Maakkal
Aviyinum Vaazhinum En?
Explanation :
What does it matter whether those men live or die who can judge of tastes by the mouth and not by the ear ?