August 15, 2019
Kural 422
குறள் : 422
சென்ற இடத்தாற் செலவிடா தீதொரீஇ
நன்றின்பா லுய்ப்ப தறிவு.
மு.வ உரை :
மனத்தை சென்ற இடத்தில் செல்லவிடாமல் தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும்.
கலைஞர் உரை :
மனம் போகும் வழியெல்லாம் போக விடாமல் தீய வழிகளைத் தள்ளிவிட்டு, நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும்.
சாலமன் பாப்பையா உரை :
மனம் சென்ற வழியெல்லாம் அதைச் செல்ல விடாமல், தீமையை விட்டு விலக்கி, நல்ல வழியில் நடத்துவது அறிவு.
Kural 422
Sendra Itaththaal Selavitaa Theedhoreei
Nandrinpaal Uyppa Tharivu
Explanation :
Not to permit the mind to go where it lists to keep it from evil and to employ it in good this is wisdom.