Kural 424
குறள் : 424
எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு.
மு.வ உரை :
தான் சொல்லுவன எளிய பொருளையுடையனவாகப் பதியுமாறு சொல்லி தான் பிறரிடம் கேட்பவற்றின் நுட்பமானப் பொருளையும் ஆராய்ந்து காண்பது அறிவாகும்.
கலைஞர் உரை :
நாம் சொல்ல வேண்டியவைகளை எளிய முறையில் கேட்போரின் இதயத்தில் பதியுமாறு சொல்லிப் பிறர் சொல்லும் நுட்பமான கருத்துக்களையும் ஆராய்ந்து தெளிவதே அறிவுடைமையாகும்.
சாலமன் பாப்பையா உரை :
அரிய கருத்துகளைக்கூடக் கேட்பவர்க்கு விளங்கும்படி எளியனவாகவும், அவர் மனங் கொள்ளும்படியும் சொல்லும்; பிறர் சொல்லும் கருத்து நுண்ணியது என்றாலும் அதை எளிதாக விளங்கிக் கொள்ளும்; இது அறிவு.
Kural 424
Enporula Vaakach Chelachchollith Thaanpirarvaai
Nunporul Kaanpa Tharivu
Explanation :
o speak so as that the meaning may easily enter the mind of the hearer and to discern the subtlest thought which may lie hidden in the words of others this is wisdom.