August 21, 2019

Kural 427

By Tamil

குறள் : 427
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.

மு.வ உரை :
அறிவுடையோர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி அறியவல்லார் அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர்.

கலைஞர் உரை :
ஒரு விளைவுக்கு எதிர் விளைவு எப்படியிருக்குமென அறிவுடையவர்கள்தான் சிந்திப்பார்கள்; அறிவில்லாதவர்கள் சிந்திக்க மாட்டார்கள்.

சாலமன் பாப்பையா உரை :
அறிவுடையார் நாளை வர இருப்பதை முன் அறிய வல்லவர்; அறிவு இல்லாதவரோ அதனை அறிய இயலாதவர்.

Kural 427
Arivutaiyaar Aava Tharivaar Arivilaar
Aqdhari Kallaa Thavar

Explanation :
The wise are those who know beforehand what will happen; those who do not know this are the unwise.