August 21, 2019
Kural 426
குறள் : 426
எவ்வ துறைவ துலக முலகத்தோ
டவ்வ துறைவ தறிவு.
மு.வ உரை :
உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்.
கலைஞர் உரை :
உயர்ந்தோர் வழியில் உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ அதற்கேற்ப நடந்து கொள்வதே அறிவாகும்.
சாலமன் பாப்பையா உரை :
உலகத்துப் பெரியோர் எவ்வாறு வாழ்கின்றார்களோ, அவரோடு சேர்ந்து, தானும் அப்படியே வாழ்வது அறிவு.
Kural 426
Evva Thuraivadhu Ulakam Ulakaththotu
Avva Thuraiva Tharivu
Explanation :
his is to wisely live and well. To live as the world lives is wisdom.